Tuesday, 24 November 2015

Spiritual Experiences in my exiled life/ என் வாழ்வு பற்றிய ஆன்மீக சிந்தனைகள் Eng & Tamil

 In my bed-room upstairs is a small Corner for my prayers
My bedroom-corner for Prayer

The most intimate Corner of our Person is our conscience. Everything depends on being loyal to God and to my conscience, which is a spark of His divinity in me. Similarly in my house too, there is a prayer Corner in my bedroom. (Tamil-Hindus have in their homes a Kovil-arai a temple-room) Here I have my personal 
prayers at least 3 times a day. 






My life is filled with some spiritual experiences of God, his revelations, religions and of an unending search of things beyond my experiences on this earth.
My Name Emmanuel indicates a sense of "God with us", Joseph, a faithful Jew who obeyed God' word and Seemampillai the son of Peter's church.
Hence my life has been a life within the catholic church but open for further revelations of Him, outside the Bible in nature and creation - God, the beyond of everything.

To be Born into a good Catholic Family, is already a gift of God.
To be baptized with the three names has already given me a program of life, to be a believer, to be a son of the church and to be always in God's presence!

After going through a life Long experience within the church from my childhood,
later as a Young lay apostolate in the Legio Marie,
as a teacer and Journalist in the world,
and the last 50 years as a Priest, theologian and human right activist,
this last few years of Exile in Europe
has gifted me a Chance to travel deeper within myself and deeper beyond These realities.

The thirst within me wells up to go beyond -
that beyond which cannot be grasped within the limited human reasoning, human Imagination,
within the limited discoveries of the human Kind.

After my visit to the NASA centre in Houston, Texas, in Jan.2015,
 where I told my guide that my next flight in space is to Heaven
I am convinced that the Lord of Life has given me life after 80,
only for two reasons.
one is to prepare me already here by cleaning me from my evils and moving me closer to Him.
The second reason, I believe, is to make me a humble Instrument
of peace and reconciliation in Sri Lanka.

On returning to Sri Lanka on the 18th of Dec.2018, 
I statrted well with my contacts in North and South to promote reconciliation. But my efforts suffered due to the somersaulting of the President Sirisena who invited me to come back
The return of Rajapaksas to government in Nov. 2019 has dashed hopes of reconciliation.

But being with the people in Jaffna and working within the Tamil churches, 
I found consolation in bringing out 4 books in 2019.

Besides, I have become convinced that the Lord has given me long life 
also to be an instrument of service to the poor in my society.

During this year 2020, I am working on a book in Tamil titled
We Tamil Christians must reform ourselves
Thamil Christhavargal Naam emmai Seer thiruththi kollavendum 

After giving lectures of ecclesiology in Sri Lanka, in Asia and in European Universities and writing many articles in English and German, I have decided to dedicate this last phase of my life 
to share my thoughts with my own people. 
During these two months of Corona threat, I have finished most of the work.
Once the Corona threat is over, I may be able to go to the press.







My Prayer of Thanksgiving - My Magnificat -
எனது நன்றிப் பாடல்

80 ஆண்டுகள் நிறைவில் 

எனது வாழ்க்கையில் 80 ஆண்டுகள் நிறைவில்
இறைவன் தந்த வாழ்விற்கும் செய்த நலன்களுக்கும் நன்றி சொல்ல  
எனது நன்றிப் பாடலை புனித மரியாளின் நன்றிப் பா உருவத்தில் 
(Magnificat)
வரையத் துணிகிறேன்.

ஏன் துணிந்தேன்?
எனது கடந்த 80 ஆண்டுகள் சீவியத்தையும்
அதில் நான் அனுபவித்த சகலத்தையும்
திரும்பிப் பார்க்கும் பொழுது,
என் மனதில் பல் வேறு சிந்தனைகள் சிதறுகின்றன.
அவைகளை ஓர் அளவிற்கு காலத்திலும் 
கருத்திலும் நிரைப்படுத்த முயலும் பொழுது, 
என் உள்ளத்தில் பிறக்கும்;, மகிழ்ச்சியையும், நன்றி உணர்வையும்
இறைவனுக்கும் என் உடன் மனிதருக்கும்
எப்படி நான் பாடுவேன் என்று எண்ணிய பொழுது,
மரியன்னையின் நன்றிக் கீதமே மிகப் பொருத்தமாக
என் மனதில் தோன்றியது.
மரியாiளையும் சூசையையும் தேர்ந்த அதே இறைவனே
என்னையும் தேர்ந்தார்.
ஆகையினால் இறை அருளினால் தூண்டப் பட்டவனாக 
நானும் என் வாழவின்; சுய சரிதையை
அவளின் பாணியில் பாட இறைவன் அருள் தருவாராக.

லூக்காஸ் 1. 46
அதைக் கேட்ட மரியாள் பின்வருமாறு கூறினாள்:

47. ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. ஏன் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.
 48 ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
49 ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர்.

50 அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலை முறை தலை முறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்.

51 அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார்.

52 வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.

53 பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

54 மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்;

55 தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்".

 56 மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.


நான் தோன்றிய சூளல்

இலங்கைத் தீவின் வட பகுதியில்
தமிழர்கள் பல ஆயிர ஆண்டுகளாக வாழ்ந்து
அதை தமது தாயகமாக கொண்டிருக்கையில்
அதன் தலை நகரமான யாழ்ப்பாணத்தில்
ஓர் சர்வ சாதாரண எழிமையான, வறுமை அனுபவித்த,
ஆனல் இறை விசுவாச வாழ்க்கை நிறைந்துள்ள,
ஒரு கத்தோலிக்க குடும்பத்தில்
இரண்டாவது பிள்ளையாகவும் முதல் மகனாகவும்
திருச்சபையில் மூவிராசாக்கள் விழாவாகிய நாளில்
06. 01. 1934 பிறந்தேன்.

(யாழ் கச்சேரியில் என் பிறப்பை பிழையாக 11. 04. 1934 என பதிந்து
விட்டனர் )

எவ் வித சிருட்டியாக தோன்றுவது என்பது இறைவனின் தேர்வு.

எப்படிப் பிறப்பது, எங்கே பிறப்பது, 
என்ன சொத்துக்களுடன் என்ன கொடைகளுடன் பிறப்பது அவையெல்லாம் இறைவனின் திட்டமும் தேர்வும்.

ஒருவன் மனிதனாக உருவெடுப்பதும்,
எந்த இடத்தில், என்ன இனத்தில், எந்தக் குடும்பத்தில், 
என்ன சூழலில், பிறக்கிறான், என்பதும், 
இனாமாகப் பெற்றுக்கொள்ளும் மொழி கலை கலாச்சாரம்,
திறமைகள் அனைத்தும் இறைவனின் கொடைகள்.
இவற்றை அனைத்தையுமிட்டு நான் பெருமைப் படுகின்றேன்.
47. ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. ஏன் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.

 
ஓவ்வொரு சிருட்டிப்பும், 
அதிலும் சகல சிருட்டிப்பின் சிகரமாகத் தோன்றும் மனிதனும் 
ஒரு அற்புத மறை பொருள்.
நான் ஓர் தமிழனாக இலங்கையில் இக் குடும்பத்தில் 

பிறக்க இறைவன் சித்தங் கொண்டார்.



இவை அனைத்தும் கொடைகளும்

அதே சமயத்தில் கடமைகளும்.

எனது வாழ்க்கை முழுவதிலும் இக் கொடைகளை வாழ்வதிலும்,

காப்பதிலும், மேம் படுத்துவதிலும் அவைகளுக்காகப் போராடுவதிலும்

எனது வாழ்வை ஓரளவிற்கு செலவழித்திருக்கிறேன்.



48 ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
49 ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர்.

எனது குடும்பம்

என்னை பெற்றெடுத்த தாய் கெலன் செல்லம்மா
பெரிய விழானில், கத்தோலிக்க குடும்பத்தில்
மூன்று பிள்ளைகள் நடுவில் இரண்டாவதாகத் தோன்றியவள்.

உயர் பள்ளி சென்றவளல்ல, சாதாரண கல்வியுடையவள்,
ஆனால் இறை விசுவாசமும் தன் நம்பிக்கையுமுடையவள்.

எனது தகப்பன் சூசைப்பிள்ளை சீமாம்பிள்ளை
 அச்சுவேலியில், கத்தோலிக்க குடும்பத்தில்
ஆறு பிள்ளைகளுக்குள் மூத்த மகனாகத் தோன்றியவர்.

கிராமப் பள்ளியில் சாதாரண கல்வியுடன், சற்று ஆஙகிலமும் கற்றவர்.

வாலிபனாக தலை நகர் கொழும்பில் சிலோன் பிறின்டேசில்
ஆங்கில ஆச்சுக் கோர்க்கும் பயிற்சி பெற்றவர்.
ஆகையால் திருமணத்தின் பின்
யாழ் புனித வளனார் கத்தோலிக்க அச்சகத்தில்,
ஆங்கில அச்சுக் கோப்பாளராக பணி புரிந்தவர்.

என்னுடன் அக்கா தம்பி தங்கச்சி சேர்ந்து நாலு பிள்ளைகள்.

தலைப்பிள்ளை எனது அக்கா மேரி அக்நேஸ் (புஸ்பமணி)
எனக்கு அடுத்தவர் தம்பி பிறான்சீஸ் சேவியர் (நவராசா)

அவருக்குமடுத்தவர் தங்கை மேரி ஆன் (பேபி)

முதலில் மண் வீடு,  பின்பு வாடை கொடுக்கும் கல் வீடு,
வசதிகள் குறைந்தாலும் வருமானத்திற்கேற்ப வாழ்க்கை.
இறை பற்றுள்ள சமாதானம் சந்தோசம் ஒற்றுமை நிறைந்த
குடும்பமாக வாழ்ந்தோம்.


எனது திருமுழுக்கும் பெயர்களும்

யாழ் புனித மரியாள் பேராலயத்தில்,
திரு. திருமதி வேதநாயகம் இருவரை ஞானப் பெற்றோராக கொண்டு திருமுழுககுப் பெற்றேன்.

எனக்கு சூட்டப்பட்ட பெயர்கள் -
சீமாம்பிள்ளை யோசவ் இம்மானுவேல்
எனது வாழ்க்கை வடிவத்தையும் பரிமாணத்தையும் விளக்கின.

நான் தை மாதம் 6ம் தகதி, மூவிராசாக்கள் விழாவில் பிறந்தேன்.

நத்தால் பண்டிகை புது வருடப் பிறப்பு நாட்களில்
அடிக்கடி கோவிலில் ஒலிக்கும் நாமம் இம்மானுவேல்,
அத்துடன் சூசை .அத்துடன் சூசை அல்லது திருமுழுக்கு யோவான் .

எனது தந்தை அச்சுவேலி சூசையப்பர் கோவிலைச் சேர்ந்தவர்,
சூசையப்பர் அச்சகத்தில் பணி புரிந்தவர்.
ஆகையினால் பிறக்கவிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா?, திருமுழுக்கில் என்ன நாமம் சூட்டுவோம்? ஏன்ற வினாக்கள்,
பேற்றோர் உரையாடலில் இருந்திருக்கலாம்.

ஆணாகப் பிறந்த எனக்கு யோசவ் இம்மானுவேல்
என்று பெயர் சூட்டினர்.

இறைத்திட்டத்தில் எனது மூன்று பெயர்கள்
சீமான்பிள்ளை, யோசவ், இம்மானுவேல் என்பன
எனது வாழ்க்கைத் திட்டமுமாயிற்று!

சீமோனின் கத்தோலிக்க திருச்சபைக்குள் வாழ்ந்து பணிசேய்து கொண்டு,

இறைவன் யூத யோசேப்பிற்கு கொடுத்த இறைவெளிபாட்டையும் கட்டளைகளையும் பெற்றவனாக,

இறைவன் எப்போதும் என்னுடன் இருந்து செயல்படுகிறார் என்ற விசுவாசத் துணிவில் வாழ்கின்றேன்.

வளர்ந்த சூளல்

ஆரம்ப கல்வியை புனித சாள்ஸ(மாவடி) பள்ளியில் ஆரம்பித்தேன்.

2ம் வகுப்பு முடிந்ததும் நெருப்புக் காய்ச்சலினால்
நீண்ட நாட்கள் வைத்திய சாலையிலிருந்தேன்.
ஒரு வருடம் முழுவதும் பள்ளி செல்ல முடியவில்லை.

3ம் வகுப்பிலிருந்த புனித பத்திரீசியார் கல்லூரியில் சேர்ந்து
கல்வியைத் தொடர்ந்தேன்.

1944ம் ஆண்டு தொட்டு இலவசக் கல்வீ
அரசாங்கத்தினால் கொண்டு வரப்ட்டது.
ஆனால் எமது கல்லூரியில் கொடுக்கப் படும்
வசதிகளுக்காகன என்ற தவணைப் பணம் வசூலிக்கப் பட்டது.

அதைத் தன்னும் நேரத்திற்கு வறுமையையிட்டு
எமது பெற்றோர் கொடுக்காததினால்
நான் பாடசாலை நேரத்தில் வீட்டிற்கு அனுப்பப் பட்டேன்.

எனது நன்றிப் பாடல்
அன்பான எல்லாம் வல்ல இறைவா !
உமது சந்நிதானத்தில் மண்டியிடுகிறேன்.

சிரம் உயர்த்தி உம்மைப் பார்க்க தகுதியற்றவன் நான்

வாழ்வின் ஊற்றே, எனது வரலாற்றின் சிற்பியே!
சிரம் தாழ்த்தி கரம் கூப்பி நன்றி கூறுகின்றேன்.