Saturday, 6 August 2016

இதய தாகம் இருப்பார் வருக- எனது அணுகுமுறையை முன் அறிவித்தது Tamil

1. மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயம்
அனைவருக்கும் அன்புடன் அகலக் கரம் நீட்டி அழைக்கின்றது.

1970 ம் ஆண்டில் இலங்கை மானிப்பாயில் புனித அந்தோனியார் ஆலயத்தை கட்டி முடிக்கும் பாக்கித்தை பெற்றிருந்தேன். இந்துக்களும் கிறீத்தவர்களும் கத்தோலிக்கரும் வாழும் இந்த இடத்தில் ஆலயம் எல்லோருக்கும் திறந்ததாகவும் எல்லோரையும் வரவேற்பதாகவும் இருக்க வேண்டுமென்பதை அப்போதே விரும்பினேன்.ஆகையினால் திருக்குடும்ப சகோதரிகள் லுசில்லா அனுன்சியாட்டா இவர்களின் உதவியுடன் படம் வரைந்து அருட்திரு மதுரநாயகம் அவர்களின் வேலைத்தலத்தில் இரும்புக் கதவை செய்வித்தேன்.

தாகம் உயிருள்ள  சிருட்டிப்புகள்  எல்லாவற்றிற்கும் இருக்கும் குணாதிசயம். 
தாகம் இல்லாது வாழ்வு இல்லை!
எல்லா வாழ்விற்கும் தாகம் இருக்க வேண்டும்.
பறவைகள் மிருகங்கள் மனிதர்கள் மாத்திரமல்ல
பயிர்களும் நிலமும் வாழத் தாகிக்கின்றன. 

இதய தாகம் பல விதமானவை.
ஆசைகள் விருப்பங்கள் பல உண்டு.
ஆன்மீக தாகம் மனிதர்களுக்கு விசேடமானது.
ஆதியிலிருந்தே மனிதன் தன து வாழ்விற்கும்
தன்னைச் சூழந்துள்ள சகலதுக்கும்
ஆரம்ப காரணியைத் தேடி அலைந்தான்.

இறைவன் தன்னைத் தேடும் மனிதனுக்கு
பல வழிகளில் தம்மை வெளிப்படுத்தினார்.
அவற்றிலிருந்து தான் மதங்கள் உருவாகின.
ஆகையால் இதய தாகமுடைய அனைவரும் வருக! 

2. தாகத்தின் ஆன்மீகம் என்றால் என்ன?


தாகம் ஓர் அடிப்படையான ஓர் பண்பு.
சீவனின் அடையாளம். தாகம் தணிந்தால் மரணம் ஆரம்பிக்கும்.
வாழ்க்கையில் நாம் பலவற்றை தேடுகிறோம்.
இந்த தேடும் தாகம் மிக முக்கியமானது.
மனித ஆன்மா இயற்கையாகத் தெய்வீகத்தை தாகிக்க வேண்டும்.
ஆனால் அது உடலில் குடிகொண்டிருக்கும் போது
தெய்வீகத்தை மாத்திரமல்ல உடலின் தேவைகளுக்கும்
உலகத்தின் கவர்ச்சிகளுக்கும் முகங்கொடுக்கின்றது.
நாமும் எமது உடலும் ஓர் வெறுமையான பாத்திரம் போன்றன.
பாத்திரத்தின் தன்மை தாழமையானது வெறுமையானது
தன்னை நிரப்ப ஆயத்தமாக ஏங்கி நிற்கின்றது.
அதன் நோக்கு ஓர் நல்ல திறமான குடி பானத்தை பெறுவது.
அதன் மகிமையும் பெருமையும் குடிபானத்தின் திறமையில் தங்கியுள்ளது.
நாம் எமக்காக தாகிக்கும் பொருட்களின் பட்டியல் மிக நீண்டது.
உதாரணமாக உடல் அழகு பொருள் பணம் படிப்பு பட்டம் புகழ்
இவைகளை எவளவுதான் பருகினாலும் உடலின் தாகம் தீராது
உண்மையான நிறைவான சந்தோசமும் கிடையாது.

ஆனால் இன்னோர் பட்டியலும் உண்டு!!!
உண்மை அன்பு நீதி அமைதி இரக்கம் போன்றவை.
இவைகள் தான் எம்மையும் எமது ஆன்மீகத்தையும் மேம்படுத்தும்.
ஆனால் இவைகளை நாம் இலேசாக எம் பாத்திரத்தில் பெறமுடியாது.
இவை ஒவ்வொன்றையும் தாகம் என்ற தலைப்பின் கீழ் ஆராயலாம்.
ஒவ்வொன்றிற்குமான தேடு பயணம் எம்மில் ஆரம்பிக்க வேண்டும்.
திக் நதான் என்று அழைக்கப்படும் புத்த ஞானி பாரிசில் வாழ்பவர்
அவர்  சமாதானம் பற்றியும் விடுதலை பற்றியும் அழகாகக் கூறுகிறார்
- உனக்கு சமாதானம் வேண்டுமாயின் நீயே முதலில் உன்னில்
சமாதானத்தை உருவாக்கு. 
உனன்கு விடுதலை வேண்டுமாயின் நீயே முதலில் உனக்குள் விடுதலையை ஏற்படுத்து.
எமது உள்ளத்தில் இறைவனுடனும் அயலானுடனும் சமாதானமாக வேண்டும்.
எமது உள்ளத்தில் ஊறியிருக்கும் அடிமைத் தனங்களுக்கு ஓர் முடிவு காண வேண்டும்.

விடுதலைக்காகவும் சமாதானத்திற்காகவும் நீண்ட காலமாகத் தாகித்து
எவ்வளவோ உயிர்களையும் சொத்துக்களையும் இளந்து விட்டோம்.
எனது உறுதியான விசுவாசம் என்ன வென்றால் -
தமிழர் தமக்குள்ளே இருக்கும் ஒடுக்கு முறைகளை சாதி வேறுபாடுகளை களையா விட்டால் உண்மையான விடுதலை எமக்கு ஒரு போதும் எட்டாது!!!

3. பேராசை தவிர்த்து தாராள மனதுடன் பகிர்தல்
நம்மிடம் உள்ளதையிட்டு இறைவனிடமும்
மனிதரிடமும் பெற்றதையிட்டு நாம் திருப்தியடைய வேண்டும்.
அவைக்காக என்றும் நன்றியுள்ளவர்களாக வாழ வேண்டும்.
மிதமிஞ்சிய பொருளாசையுடன் சீவிப்பது பாவமாகும்.
நம்மிடம் உள்ளவற்றை தாராளமனதுடன் மற்றவர்களுடன்
விசேடமாக உதவி தேடுபவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
தேவைகளில் துடிப்பவர்களை வரவேற்பது எமது தாகமாக வேண்டும்.

ஆனால் ஆன்மீக தாகம் தேடும் ஆவியின் கொடைகளுக்கு
நாம் என்றும் தாகத்துடன் விரும்பி அவற்றை நோக்கி
விறுவிறுப்பாய் செயற்பட வேண்டும்.  


No comments:

Post a Comment